Introduction
பரம காரணனாகிய சங்கரனே பரம்பொருள் என்றும் அவரே விஷ்ணு முதல் அனைத்து தேவர்களுக்கும் தலைவர் என்பதையும் வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இவைகளை முக்கிய பிரமாணமாகவும் இராமாயணம், பாரதம், சிவரகசியம் முதலியவைகளை உபப்பிரமாணமாகக் கொண்டும் சிவபரத்துவம் ஸ்தாபிக்க எழுந்த வலைதளமே இது.
வேதப் பயன் சிவபிரானே என்று உண்மை நிறுவிய ஶைவ ஆசாரியர் மரபைத் தொடர்ந்து, சிவபரத்துவத்தை சான்றுகளோடும் தெளிவோடும் விளக்குவதே இவ்வலைத்தளத்தின் நோக்கம்.
இங்கு வெளியிடப்படும் கருத்துகள் நூல், மூலம், மேற்கோள், உரை, பொருள், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஶைவ சாஸ்திர ஆய்வுகளாக இருக்கும்.
தவறான விளக்கங்களுக்கு சாஸ்திர பதில்
பூர்வபக்ஷமாக முன்வைக்கப்படும் வைஷ்ணவ, மாயாவாத, ஏகான்மவாத விளக்கங்களுக்குச் சைவ சாஸ்திரத்தின் அடிப்படையில் பதில் அளித்து, வேதப் பயன் சிவபிரானே என்று உண்மை நிறுவுவதே இப்பகுதியின் நோக்கம்.
திருஞானசம்பந்தர், வாகீச முனிவர், ஆலால சுந்தரர், மணிவாசகர், ஹரதத்த சிவாச்சாரியார், அப்பய்ய தீக்ஷிதர், ஸ்ரீபதி பண்டிதாராத்யர், ரேணுகாச்சார்யார் முதலான சைவ ஆசாரியர்கள் நிறுவிய வழியில், வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், திருமுறை ஆகிய பிரமாணங்களின் அடிப்படையில் எதிர்வாதங்கள் மறுக்கப்படும்.
பஞ்சராத்திரிகள், ஏகான்மவாதிகள் முதலான புறச்சமயிகள் சிவபெருமானை இகழ்ந்து கற்பித ஸ்லோகங்களையும் உலகம்மையாகிய உமாதேவியாரை நிந்தனை புரிந்தும் புராண இதிகாசங்களில் பல புரட்டுகளை செய்தும் தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து எரிவாய் நரகுக்கு வழிவகை செய்கின்றனர்.
பூர்வபக்கத்திற்கும் சைவத்துக்கும் பொதுவான நூல்களான சுருதியாகம புராண இதிகாச ஸ்மிருதிகளை முதல் பிரமாணமாகக் கொண்டும் சைவநூல்களை உபப்பிரமாணமாக கொண்டும் பரமேசுவரனின் பரத்துவத்தை அறிந்து, கல்பித ஸ்லோகங்களையும், கல்பித உபநிடதங்களையும், அவைதிக நூல்களையும் நிராகரித்து சிவபரத்துவத்தை மலைவு படாது தெளிவோம்.
ஶைவ ஸித்தாந்தம், ஆகமம், திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், ஶைவ ஆசாரியர் மரபு ஆகியவற்றின் அடிப்படையில் வரும் கட்டுரைகள்.
அனைத்து கட்டுரைகள் →வைஷ்ணவ வாதங்கள், மாயாவாத விளக்கங்கள், ஏகான்மவாதம், எதிர்மதக் கருத்துகள் ஆகியவற்றுக்கான சைவ சாஸ்திர மறுப்பு.
விபூதி மகிமை, ஶைவ வரலாறு, தலபுராணம், ஆசார மரபு, தமிழ் ஶைவ சமயப் பரம்பரை ஆகியவற்றுக்கான தொகுப்பு.
அனைத்து கட்டுரைகள் →Method Followed
- முதன்மை நூல் பிரமாணங்களுக்கு முன்னுரிமை
- சாத்தியமான இடங்களில் சரியான நூல், அத்தியாயம், ஸ்லோக குறிப்பு
- சூழல் பார்த்து பொருள் கூறுதல்
- மூலம், மொழிபெயர்ப்பு, வாதம் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுதல்
- சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கில விளக்கங்கள் தேவையான இடங்களில் தருதல்
- ஶைவ சாஸ்திர நிதானத்துடன் எதிர்வாதங்களை மறுத்தல்
Comments
Post a Comment