இராமன் சிவபிரான் திருவருளால் சிவதுனுசை வளைத்தல்
ஸ்ரீ ஞானசம்பந்த குருப்யோ நமஹ!! .
இராமேஸ்வரர் - இராமனுக்கு ஈஸ்வரராகிய சிவபிரான்.
விதேக நாட்டு மன்னனாகிய சனகனுக்கு கனவில் சிவபிரான் பார்வதிதேவியோடு காட்சி தந்து சீதையை ராமனுக்கே மணம் முடித்து வைக்கும் உபாயத்தை கூறி அவருக்கு சிவதுனுஸை வழங்கி எனதருளால் இதனை இராமன் இந்த வில்லை வளைத்து வைதேகியை மணம் முடிப்பான் என்று அருளியது பத்ம புராணம் பாதாளகாண்டத்தில் உள்ளது.
1. பத்ம புராணம் பாதாளகாண்டம், 116 அத்தியாயம்
ஸ்லோகம் 99, 100, 101, 102:
"அத மத்யே நிஶம் ராஜா ஶுசிர்பூத்வா த்ரயம்பகம் ஸாம்பிகம் மங்களதுகூலதாரிணம் கமலபவபுருஷோத்தமஶக்ரப்ரமுகநிகிலதேவைர்ப்ருகுப்ரமுகமுநிவரைஃ ஹாஹாப்ரமுககந்தர்வைஸ்தும்புருப்ரமுகைஶ்ச ஶ்ருதிஸ்ம்ருதிதிஹாஸபுராணைர்மூர்திமத்பிஶ்ச ஸித்தவித்யாதராதிமாத்ருகாகணைஶ்ச நந்தீப்ரமுககணைஶ்ச ஸேவ்யமானபாதகமலம் ஸர்வாமங்களபரிமோசகமதிபுண்யஸலிலயா கங்கயா நிஷ்கலம் கேன சந்த்ரமஸா ஸேவ்யமானஶிரோபாகம் வாமாங்காரூடயயா கிரிஜயா ப்ரதீயமானவீடிம் ஸஹாஸம் ஸகாமம் ஸஹாவேக்ஷணமாததானம் கோக்ஷீரஸத்ருஶம் ப்ரதிகூலகஸ்தூரிகாஸத்ருஶகண்டம் ம்ருதுஸூக்ஷ்மஸ்னிக்தஜடாபிர்விரசிதகபர்தம் விஶுத்தகார்தஸ்வரகுண்டலோபஶோபிதகண்டபாகம் த்விரஷ்டவர்ஷவயஸம் கோக்ஷீரஸத்ருஶம் ஸ்தூலமுக்தாபலகஸூம்பவர்ணாங்கலேனாவேஷ்டிதஶிரோபாகம் விவிதரத்னவிரசிதகார்தஸ்வரபூஷிதவக்ஷஃஸ்தலமதிதவலோபவீதேனோபஶோபிதஶரீரமம்பிகானுலக்னகுங்குமாருணஸுகந்திஶரீரமீக்ஷணம் தரஜமானகாமமார்கணம் கோடிகந்தரபஸத்ருஶம் மனஸாசிந்தயத் ॥99॥ ஜஜாப ஶதருத்ரியம் ஜுஹாவ ச தேனைவ காமாஹுதிஃ ப்ராஸ்துவச்ச புருஷஸூக்தேன ॥100॥அத தாத்ருஶ ஏவ மஹேஶ்வரஸ்தத்ர ப்ராதுரபூத் ॥101॥ அத ராஜா நமஸ்க்ருத்யாஸ்துவீத ॥102॥"
ஸ்லோகங்கள் (99- 102) இன் பொருள் :
பின்னர் நள்ளிரவில் ராஜா தூய்மையடைந்து, திரயம்பகனை அம்பிகையுடன் மங்களமான பட்டு ஆடை அணிந்தவரை, பிரம்மா, விஷ்ணு, இந்திரன் போன்ற அனைத்து தேவர்களாலும், பிருகு போன்ற முனிவர்களாலும், ஹாஹா போன்ற கந்தர்வர்களாலும், தும்புரு போன்றவர்களாலும், ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாஸ, புராணங்கள் உருவெடுத்தவர்களாலும், சித்தர்கள், வித்யாதரர்கள், மாத்ருகா கணங்கள், நந்தி போன்ற கணங்களாலும் சேவிக்கப்படும் தாமரை போன்ற பாதங்களை, அனைத்து அமங்களங்களையும் நீக்குபவரை, அதி புண்ணியமான நீரால் கங்கையாலும், களங்கமற்ற சந்திரனாலும் சேவிக்கப்படும் சிரோ பாகத்தை, இடது தொடையில் அமர்ந்த கிரிஜையால் (பார்வதியால்) வழங்கப்படும் வெற்றிலையை, சிரிப்புடன், விருப்பத்துடன், பார்வையுடன் ஏற்றுக்கொள்பவரை, பசும்பால் போன்ற வெண்மையானவரை, கஸ்தூரிக்கு எதிரான நீல கண்டத்தை, மிருதுவான, சூட்சுமமான, பளபளப்பான ஜடைகளால் உருவாக்கப்பட்ட கபர்தத்தை, தூய்மையான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்ன பாகத்தை, பதினாறு வயதுடையவரை, பசும்பால் போன்ற வெண்மையான பெரிய முத்து போன்ற கௌசும்ப வர்ண ஆடையால் சுற்றப்பட்ட சிரோ பாகத்தை, பல்வேறு ரத்தினங்களால் உருவாக்கப்பட்ட தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மார்பை, அதி வெள்ளை பூணூலால் அலங்கரிக்கப்பட்ட உடலை, அம்பிகையின் உடல் தொடுதலால் குங்குமம் சிவப்பாகவும், சுகந்தமாகவும் உள்ள உடலை, காம தேவனின் அம்புகளை கேலி செய்து பார்க்கும், கோடி காம தேவர்களைப் போன்றவரை மனதால் சிந்தித்தான்.அவன் ஶதருத்ரீயத்தை ஜபித்தான், அதனாலேயே விருப்பமான ஆஹுதியை ஹோமம் செய்தான், புருஷ சூக்தத்தால் ஸ்தோத்திரம் செய்தான்.பின்னர் அந்த வடிவத்திலேயே மஹேஶ்வரன் அங்கு தோன்றினான்.பின்னர் ராஜா நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்தான்.
குறிப்பு: "புருஷசுக்தத்தில் குறிப்பிடப்படும் புருஷன் சிவபிரானே என்பதும் திருஉருத்திரத்தில் குறிப்பிடப்படும் இறைவன் மகாருத்ரனாகிய சங்கரனே" என்பதும் இந்த ஸ்லோக வாக்கியங்களால் உறுதியானது. இராஜரிஷி சனகனே இந்த இரண்டு சுக்தங்களால் சிவபிரனைத் துதித்து அவர் அருள் பெற்ற தன்மை வெளியானது.
ஸ்லோகம் 103 - 110:"க்ஷிதிஸலிலககனபவனதஹனரவிஶஶியஜமானமூர்திபிரஷ்டமூர்தே விஶ்வமூர்தே லோகமூர்தே த்ரிபுவனமூர்தே வேதபுராணமூர்தே யஜ்ஞமூர்தே ஸ்தோத்ரமூர்தே ஶாஸ்த்ரமூர்த்தேஸ்வதாமூர்தே நாராயணமூர்தே ஸர்வதேவதாமூர்தே த்ரயீமயத்ரயீப்ரமாணத்ரயீநேத்ரஸாமப்ரியவஸுதாராப்ரியபக்திப்ரியபக்தஸுலபாபக்தவிதூரஸ்துதிப்ரிய தூபப்ரிய தீபப்ரிய க்ருதக்ஷீரப்ரிய த்ரோணகரவீரப்ரிய ஶ்ரீபத்ரப்ரிய கமலகஹ்லாரப்ரிய நந்த்யாவர்தப்ரிய பகுலப்ரிய யூதிகாப்ரிய கோகனதப்ரிய க்ரீஷ்மஜலாவாஸப்ரிய யம நியமப்ரிய நியதேந்த்ரியப்ரிய ஜபப்ரிய ஶ்ராத்தப்ரிய காயனப்ரிய காயத்ரீப்ரிய பஞ்சப்ரஹ்மப்ரிய ஸதாசாரப்ரிய கோத்ரோத்ஸாதிகமலபவஹரிஹரநயனஸமர்சித பாதகமலஜயப்ரத ஹரிப்ரார்திதஜலோத்பாதிதசக்ரப்ரதர்ஶக்ருத்ஸ்ம்ருதியுக்திப்ரத ஸ்ம்ருதமங்கலப்ரத ம்ருத்யுஞ்ஜய நமஸ்தே நமஸ்தே ॥103॥. இதி ஸ்தோத்ரமாகர்ண்ய பகவான்பவோ ராஜானமுவாச வரதோऽஹம் வரம் வ்ருணு ॥104॥ ராஜோவாச ஶ்ரீன்மம கன்யா வைதேஹீ ராமாய தத்த்ஸிதா ஸ்வயம்வரே குலரூபபலோத்ஸாஹ ஸம்பன்னானேகபூபராக்ஷஸவிப்ராதிஸர்வப்ராணிஸமாகமே ராமாதிகபலோ யதி தாமக்ரஹீஷ்யத ததா வசனமன்ருதம் மம பாபம் ச பவிஷ்யதி ॥105॥ ப்ரத்யுத தஶரதோऽபி ஸர்வாணேவாகதான்விஜேதுமலம் க்ஷத்ரகதனஶ்ச ராமோ யத்யாயாஸ்யதி தரீ மம ஸுதாம் கிம் கரிஷ்யதி வா கிம்கிம் வா ப்ரேஷயிஷ்யதி கீத்ருஶம் காரயிஷ்யதி மம கிம்வா கரிஷ்யதி ஸர்வதா ஹி ப்ரபூதபலவாஹனோ நரபதிரஶேஷமபி த்ரிபுவனம் ஹன்யாத் கிமுத மாமல்பஸத்வம் கிமுத பஹுனா பவானேவ ஶரணம் மமோபாயம் வத யதா விவாஹே ஶ்ரேயோ பவிஷ்யதி ராமஶ்ச ஜாமாதா பவிஷ்யதி ॥106॥ ஶம்புரபி ததா கரோமீத்யுவாச ॥107॥ ராம ஏவ நாதஃ ஸீதாயாஃ பவிஷ்யதி ராமம் ச க்ருத்வா ஸ்வஸ்த்யத்யைவ கரிஷ்யாமி க்ருஹாணாஜகவம் தனுரிதம் ॥108॥ ராஜோவாச கிமேதேனாஜகவேன தனுஷா ஸ்வயம்வரே ஸீதாம் ராமம் ப்ராபய ॥109॥ஶங்கர உவாச ! இதம் தனுரஸஜ்யம் மே யஸ்து ஸஜ்யம் கரிஷ்யதி தஸ்மை தேயா மயா ஸீதா ப்ரதிஜ்ஞாமேவமாசர ॥110
ஸ்லோகங்கள் (103 - 110) இன் பொருள் :
பூமி–நீர்–ஆகாயம்–வாயு–அக்னி–சூரியன்–சந்திரன் ஆகிய வடிவங்களாகவும் (அஷ்டமூர்த்தியாகவும்) விளங்கும் இறைவனே; உலகமெங்கும் நிறைந்த மூர்த்தியே; வேத–புராணங்கள், யாகங்கள், ஸ்தோத்திரங்கள், சாஸ்திரங்கள் ஆகியவையாக விளங்கும் மூர்த்தியே!; நாராயண வடிவமாகவும் எல்லாத் தேவதைகளாகவும் நிற்கும் மூர்த்தியே;
துதி, தூபம், தீபம், நெய், பால் முதலிய பூஜைப் பொருட்களையும் (பல்வேறு மலர்களையும்) விரும்பி ஏற்றுக்கொள்வோனே; யம–நியமம், கட்டுப்பட்ட இந்திரியம், ஜபம், ஸ்ராத்தம், காயனம், காயத்ரீ, பஞ்சப்ரஹ்மம், நல்லாசாரம் போன்றவற்றை விரும்பும் இறைவனே;
மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜயனே!, உமக்கு என் வணக்கம், என்று இவ்வாறு சனகன் துதித்தான். இந்த ஸ்தோத்திரத்தை கேட்ட பின், பகவான் பவனாகிய சிவபிரான் அரசனை நோக்கி: ‘நான் வரம் அளிப்பவன்; உன் வரத்தை கேள்’ என்றார்.அரசன் சொன்னான்: ‘என் மகள் வைதேஹியை ராமனுக்கே தர விரும்புகிறேன். ஆனால் சுயம்வரத்தில் பல அரசர்கள், ராட்சசர்கள், பிராமணர்கள் என எல்லோரும் கூடுவார்கள். ராமனை விட வலிமை மிகுந்தவன் வந்து அவளை எடுத்துக்கொண்டால், என் சொல் பொய்யாகும்; அதனால் எனக்குப் பாபம் உண்டாகும்.“மேலும்,‘தசரதனும் பலரையும் வெல்ல வல்லவன்; ராமனும் மகா வீரன். ஆனாலும் (சுயம்வரத்தில்) இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்வேன்? மிக வலிமையான அரசன் மூன்று உலகத்தையும் கூட அழிப்பான்; எனக்கோ சிறு வலிமை. ஆகவே நீயே என் சரணம். இந்த திருமணம் நன்மையாக அமைய, ராமனே என் மருமகனாக ஆக, உபாயம் சொல்லுங்கள்’ என்றிரந்தான் சனகன். அதனைக் கேட்டருளிய சம்புவான சிவனும் ‘அப்படியே செய்கிறேன்’ சீதைக்கு நாதனாக ராமனே இருப்பான். ராமனுக்கு மங்களம் செய்து நான் உடனே ஒரு ஏற்பாடு செய்கிறேன். இந்த அஜகவம் (சிவனுடைய) வில்லை பெற்றுக்கொள்’ என்றார்.”“அரசன் சொன்னான்: ‘இந்த அஜகவ வில்லால் என்ன பயன்? சுயம்வரத்தில் சீதை ராமனையே அடையுமாறு செய்யுங்கள்.’”“சங்கரன் சொன்னார்: ‘இது என் வில்; இதை யாராவது கயிறேற்றி (சஜ்யம் செய்து) அமைக்க முடிந்தால், அவனுக்கே சீதை வழங்கப்பட வேண்டும். நீ இப்படியே சபதம்/பிரதிக்ஞை செய்து நட’ என்றார்.”
இந்த பாதாள காண்ட வாக்கியங்களால் பரம காரணனாகிய பரமேஸ்வரனே இராமன் சிவதுனுசை முறிக்க காரணமாக இருந்திருக்கிறார் என்பதும் இராமன் சீதை திருமணம் சிவசங்கலபம் என்பதும் வெளியானது.
திருச்சிற்றம்பலம்
Credit : Lord Shiva Lectures - Rama Jayanti

No comments:
Post a Comment