வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை
ஸ்ரீ ஞானசம்பந்த குருப்யோ நமஹ
விபூதி , ரக்ஷை , பஸ்மம், நீறு என்று பல பெயர்களில் சான்றோர்களால் புகழப்பட்ட இந்த சாதனத்தின் பெருமையை வேத சிவாகம புராணங்களிற் கூறப்பட்ட வழி காண்க. இந்த பகுதி சிவமகாபுராணம் வித்யேஸ்வர சங்கிதையில் 24 ஆம் அத்தியாயம் பஸ்ம மகிமையை கூறுகிறது. அவற்றுள் சில:
ஸ்லோகம் - 7
"அக்னிஹோத்ரோத்திதம் பஸ்மஸங்க்ராஹ்யம் வா மனீஷிபிஃ ।அந்யயஜ்ஞோத்திதம் வாபி த்ரிபுண்ட்ரஸ்ய ச தாரணே ॥ ௭ ॥"
பொருள்:
அக்னிஹோத்ரத்திலிருந்து கிடைக்கும் திருநீற்றையோ, அல்லது வேறு யாகங்களில் உண்டாகும் திருநீற்றையோ — திரிபுண்டரம் அணிவதற்காக புத்திமான்கள் சேகரித்துக் கொள்க.
ஸ்லோகம் - 8
"அக்னிரித்யாதிபிர் மந்த்ரைர் ஜாபாலோபநிஷத்-கதேஃ । ஸப்தபிஃ தூலனம் கார்யம் பஸ்மனா ஸ-ஜலேன ச ॥ ௮ ॥
பொருள் :
அக்னிரிதி எனத் தொடங்கும் ஜாபால உபநிடத மந்திரங்களால் அபிமந்திரித்து பஸ்மத்தை நீருடன் குழைத்து ஏழுமுறை பூசுதல் வேண்டும்.
குறிப்பு: பஸ்ம ஜாபால உபநிடதத்தில் முதல் அத்தியாயத்தில் "அக்னிரிதி பஸ்ம" எனத் தொடங்கும் மந்திரங்கள் உள்ளன.
ஸ்லோகம் - 11
"ஶிவேன விஷ்ணுநா சைவ ததா திர்யக்திரிபுண்ட்ரகம் । உமாதேவீ ச லக்ஷ்மீம்ஶ்ச வாசாந்யாபிஶ்ச நித்யஶஃ ॥ ௧௧ ॥"
பொருள்:
சிவபிரான், நாராயணர் , உமையவள், இலக்குமி மேலும் பல தேவிகளாலும் குறுக்காக திரிபுண்டரம் எப்போதும் நித்தியமாக அணியப்படுகிறது.
ஸ்லோகம் - 28
"ப்ரஹ்மணா விஷ்ணுநா வாபி ருத்ரேண முனிபிஃ ஸுரைஃ ।பஸ்மதாரணமாஹாத்ம்யம் ந சக்யம் பரிபாஷிதும் ॥ ௨௮ ॥"
பொருள் :
பிரம விஷ்ண ருத்ரர்களாலும் முனிகணங்களாலும் தேவர்களாலும் கூட விபூதி தாரணத்தின் பெருமையை முழுமையாக விளக்கி விட முடியாது.
குறிப்பு : "மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு" என்னும் தேவாரம் இதற்கு உபப்பிரமாணமாக உள்ளது.
ஸ்லோகம் - 41
"ப்ரஹ்மசாரீ க்ருஹீ வந்யஃ ஸம்ந்யாஸீ வா வ்ரதீ ததா । நார்யோ பஸ்ம த்ரிபுண்ட்ராம்காஃ முக்தாஃ ஏவ ந ஸம்ஶயஃ ॥ 41 ॥ "
பொருள்: பிரம்மச்சாரி, இல்லறத்தான், வனப்ரஸ்தன், துறவியர், விரதமிருப்பவன், ஆண் பெண் என அனைவரும் பஸமத்தை திரிபுண்டரமாக அணிந்தால் அவர்கள் முத்தியடைவர். இதில் சந்தேகமில்லை.
"முத்தி தருவது நீறு" என்னும் சம்பந்தர் தேவாரமுங் காண்க.
ஸ்லோகம் - 44 , 45
"த்ரிபுண்ட்ரம் யே விநிம்தம்தி நிம்தம்தி ஶிவமேவ தே । தாரயம்தி ச யே பக்த்யா தாரயம்தி தமேவ தே ॥ 44 ॥"
"திக்பஸ்மரஹிதம் பாலம் திக்க்ராமமஶிவாலயம் । திகநீஶார்சனம் ஜந்ம திக்வித்யாமஶிவாஶ்ரயாம் ॥ 45 ॥"
பொருள்:
திரிபுண்டரத்தை நிந்திப்பவர்கள் சங்கரனையே நிந்திப்பவர்கள். பக்தியோடு திரிபுண்டரத்தை அணிபவர்கள் பவனையே (தம்மேல்) அணிகிறவர்களாவர்.
விபூதி இல்லாத நெற்றி நிந்தைக்குரியது; சிவாலயம் இல்லாத ஊர் நிந்தைக்குரியது; ஈச்வராராதனை இல்லாத பிறப்பு நிந்தைக்குரியது; சிவத்தை ஆதாரமாகக் கொள்ளாத கல்வியும் நிந்தைக்குரியது.
ஸ்லோகம் - 48
"ந தாம்த்ரிகஸ்த்வதிக்ருதோ நோர்த்த்வபுண்ட்ரதரோ முநே । ஸம்தப்தசக்ரசிஹ்நோத்த்ர ஶிவயஜ்ஞே பஹிஷ்க்ருதஃ ॥ 48 ॥"
பொருள்:
முனிவரே! தாந்திரிக வழியில் நடப்பவரும், ஊர்த்துவ புண்டரம் அணிபவரும், சக்ரம், சங்கம் போன்ற அடையாளங்களை சூடுகுறியாக உடலில் கொண்டவரும்,சிவ யாகத்திற்கு உரிய தகுதி பெறாதவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் சிவயஜ்ஞத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள்.
குறிப்பு : ஊர்த்துவ புண்டரம் வேத நெறியில் நடப்பவர்களால் விலக்கத்தக்கது. அது அற்ப பரிபாகிகளுக்குரியது என்பது இதனால் பெறப்பட்டது.
ஸ்லோகம் - 49
"தத்ரைதே பஹவோ லோகா ப்ருஹஜ்ஜாபாலசோதிதாஃ । தே விசார்யாஃ ப்ரயத்நேந ததோ பஸ்மரதோ பவேத் ॥ 49 ॥"
பொருள்
இந்த விஷயத்தில், பிருஹத் ஜாபால உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள பல உபதேசங்கள் உள்ளன.அவை அனைத்தும் முயற்சியுடன், ஆழமாக ஆராயப்பட வேண்டியவை.அவ்வாறு ஆராய்ந்த பின், விபூதி மீது உறுதியான பற்றுடன் இருக்க வேண்டும்.
பஸ்ம சாபால, பிருஹத் சாபால உபநிடதங்கள் பிற்காலத்தவை என்று பொய்கூறித் திரியும் அவைதிகர்கள் வாதம் இந்த புராண வாக்கியங்களால் நிரஸ்தமானது. ஜாபால உபநிடதங்கள் இன்னும் பல ஆச்சாரியார்களாலும் புராணங்களாலும் எடுத்தாளப்பட்டுள்ளன.
"கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே." - திருமந்திரம்.
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment