வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை - தேவி பாகவதம்
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மத் தேவி பாகவதத்தில் ஏகாதச ஸ்கந்தத்தில் உள்ள 14 ஆம் அத்தியாயத்தில் நாராயண நாரத சம்வாதமாய் விபூதி தாரண மஹாத்ம்ய வர்ணனம் கூறப்படுகிறது. அவற்றுள் சில ஸ்லோகங்கள் பின்வருமாறு
ஸ்லோகம் -1
"ஶ்ரீநாராயண உவாசபொருள்:
ப்ஹஸ்மதிக்த்ஹஶரீராய யோ ததாதி த்ஹநம் முதா ।
தஸ்ய ஸர்வாணி பாபாநி விநஶ்யந்தி ந ஸம்ஶயஃ ॥ ௧ ॥"
ஸ்ரீநாராயணன் கூறினார்: விபூதியால் உடல் முழுவதும் பூசிக் கொண்டவருக்கு
மகிழ்ச்சியுடன் யார் தானம் அளிக்கிறார்களோ,
அந்த தானம் அளிப்பவரின் எல்லாப் பாபங்களும்
நிச்சயமாக அழிந்து போகும்; இதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஸ்லோகம் - 2
ஶ்ருதயஃ ஸ்ம்ருதயஃ ஸர்வாஃ புராணாந்யக்ஹிலாந்யபி ।பொருள்:
வதந்தி ப்ஹூதிமாஹாம்யம் தத்தஸ்மாத்த்ஹாரயேத்த்விஜஃ ॥ ௨ ॥
வேதங்கள், ஸ்மிருதிகள், எல்லாப் புராணங்களும் ‘விபூதி மஹிமையை’ சொல்லுகின்றன; அதனால் இருபிறப்பாளர்கள் விபூதியைத் (தவறாது) அணியக்கடவர்.
ஸ்லோகம் - 3
ஸிதேந ப்ஹஸ்மநா குர்யாத்த்ரிஸந்த் ஹ்யம் யஸ்த்ரிபுண்ட்ரகம் ।பொருள்:
ஸர்வபாபவிநிர்முக்தஃ ஶிவலோகே மஹீயதே ॥ ௩ ॥
வெண்மையான விபூதியால் தினம் மூன்று சந்திகளிலும் திரிபுண்டரம் இடுபவன்—எல்லாப் பாபங்களிலிருந்து விடுபட்டு சிவலோகத்தில் மகிமை பெறுவான்.
ஸ்லோகம் - 4
யோகீ ஸர்வாங்ககம் ஸ்தானமாபாததலமஸ்தகம் ।பொருள்:
த்ரிஸந்த்யமாசரேந்நித்யமாஶு யோகமவாப்நுயாத் ॥ ௪ ॥
யோகி, பாதத்திலிருந்து தலையளவு வரை உடலின் எல்லா அங்கங்களிலும் விபூதியை பூசும் இடங்களை நியமமாகக் கொண்டு, தினமும் மூன்று சந்திகளிலும் (காலை, நண்பகல், மாலை) அதை அனுஷ்டித்தால், விரைவாக யோகசித்தியை அடைவான்.
ஸ்லோகம் - 5
ப்ஹஸ்மஸ்நாநேந புருஷஃ குலஸ்யோத்த்ஹாரகோ ப்ஹவேத் ।பொருள்:
ப்ஹஸ்மஸ்நாநம் ஜலஸ்நாநாதஸங்க்ஹ்யேயகுணாந்விதம் ॥ ௫ ॥
பஸ்ம-ஸ்நானம் (நீறாடல்) செய்தால் மனிதன் குலத்தை உயர்த்துவான்; இது ஜலஸ்நானத்தை (நீராடல்) விட அளவிடமுடியாத பல மடங்கு சிறந்தது.
ஸ்லோகம் - 8
ப்ஹஸ்மஸ்நாநாத்பரம் ஸ்நாநம் பவித்ரம் நைவ வித்யதே ।பொருள்:
ஏவமுக்தம் ஶிவேநாதௌ ததா ஸ்நாதஃ ஸ்வயம் ஶிவஃ ॥ ௮ ॥
பஸ்ம-ஸ்நானத்தை விட மேலான புனித ஸ்நானம் இல்லை; இதனை சிவபிரான் ஆரம்பத்திலேயே கூறினார்; பின்னர் உலகோர் உய்யும் பொருட்டு பவனே விபூதி ஸ்நானம் செய்தார்.
ஸ்லோகம் - 18
ரக்ஷார்த்ஹம் மங்கலார்த்ஹம் ச பவித்ரார்த்ஹம் புரா ஸுரைஃ । ப்ஹஸ்ம த்ருஷ்ட்வா முநே பூர்வம் தத்தம் தேவ்யை ப்ரியேண து ॥ ௧௮ ॥பொருள்:
விபூதி பாதுகாப்பும், மங்களமும், புனிதமும் தரும் என்று தேவர்கள் அறிந்து, அதைத் தங்கள் தேவிக்கு அளித்தார்கள்.
ஸ்லோகம் - 28
தத்ப்ஹஸ்மத்ஹாரணம் ஶஸ்தம் ஸர்வத்ரைவ த்ரிலிங்ககம் ।பொருள்:
ப்ரஹ்மவிஷ்ணுமஹேஶாநாம் த்ரய்யக்நீநாம் ச த்ஹாரணம் ॥ ௨௮ ॥
அந்த விபூதியை தரித்தல் எல்லா இடங்களிலும் மிகச் சிறந்ததாகும்; அது மூன்று லிங்கங்களையும் (திரிலிங்கம்) குறிக்கிறது. மேலும், அது பிரம்மா, விஷ்ணு, மகேசன் என்ற மூவரையும், அதேபோல் மூன்று அக்னிகளையும் (கார்ஹபத்யம், ஆகவனீயம், தக்ஷிணாக்னி) தரித்ததாகும்.
ஸ்லோகம் - 37 , 38
ஸ்மரணாதேவ ருத்ரஸ்ய யத்ஹா பாபம் ப்ரணஶ்யதி ॥ ௩௭ ॥பொருள்:
அப்யகார்யஸஹஸ்ராணி க்ருத்வா யஃ ஸ்நாதி ப்ஹஸ்மநா ।
தத்ஸர்வம் தஹதே ப்ஹஸ்ம யத்ஹாக்நிஸ்தேஜஸா வநம் ॥ ௩௮ ॥
உருத்திரனை நினைத்தாலே எப்படி பாபம் அழிகிறதோ, அதேபோல், ஒருவன் ஆயிரம் தவறான செயல்களைச் செய்திருந்தாலும், விபூதியால் ஸ்நானம் செய்தால், பரபரப்பான அக்கினியின் தேஜஸால் ஒரு காடு எரிந்து சாம்பலாகுமோ அதுபோல, பாவங்களையெல்லாம் விபூதி எரித்தழித்துவிடும்.
குறிப்பு :
"பராவணமாவது நீறு பாவமறுப்பது நீறு" என்னும் திருநீற்றுப் பதிகமுங் காண்க.
சர்வ வித்யைகளுக்கும் காரணனாகிய பரசிவமூர்த்தியருளிய வேத சிவாகம புராணாதிகளில் விபூதியின் பெருமைகள் எண்ணிறந்தனவாக இருக்கவும் குறிப்பாக நாரணரே விபூதியணிந்து அதன் பெருமையை நாரத மாமுனிக்கு கூறிவாற்றால் மஞ்சள் பொடி, சூர்ணம் என்று கண்டதையும் பூசி விபூதி நிந்தை, பரசிவ நிந்தை செய்யும் அவைதிகர் வாதம் நிரஸ்தாமாயிற்றென்க.
"ஹிரண்யபாஹும் ஹிரண்யரூபம் ஹிரண்யவர்ணம் ஹிரண்யநிதிமத்வைதம் சதுர்தம்
ப்ரஹ்மவிஷ்ணுருத்ராதீதம் ஏகமாஶாஸ்யம் பகவந்தம் ஶிவம் ப்ரணம்ய"
- பஸ்மஜாபாலோபநிஷத் , அத்தியாயம் 1
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment