Tuesday, 2 December 2025

இராமேஸ்வர பரத்துவம் - 2

 முதல் பாகத்தில் உள்ள புராணங்களோடு இந்த புராண வாக்கியங்களையும் பரம பிரமாணமாகக் கொள்க.  இராமேசுவரத்தின் பெருமையும் இராமன் சீதையோடு திருநீறணிந்து பூசை புரிந்த ஸ்லோகங்கள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.



திருச்சிற்றம்பலம்       
                                                    
     ஸ்ரீ ஞானசம்பந்த குருப்யோ நமஹ!     
                                
                        இராமேஸ்வரம் - இராமனின் ஈஸ்வரனாகிய சிவபிரான் இருந்தருளும் தலம்  
                                                        
                                               "தசரத தநய ஸ்தாபிராதி தத்வாத் "                                       
                                                                                                - சுலோக பஞ்சகம்



  

1. சௌர புராணம்

               "
ஆநயாமாஸ தாம் சீதாம் அஶோகவனமத்யகாம் ।
                ப்ரதிஷ்டாப்ய மகாதேவம் சேதுமத்யேʼத ராகவஃ ॥ 
                
லப்தவாந் பரமாம் பக்திம் சிவே ஶம்போரனுக்ரஹாத் ।
                ராமேஷ்வர இதி க்யாதோ மகாதேவஃ பிநாகத்ருக் ॥
                                                                                    -  முப்பதாம் அத்தியாயம்,  ஸ்லோகம் : 64, 65

      பொருள் :  அஷோக வனத்தில் இருந்த சீதையை ராகவன் மீட்டுக் கொண்டு வந்தான்.
அதன் பின்னர், அந்த ராகவன் சேதுவில் (ஆதிசேதுவில்) மகாதேவனை பிரதிஷ்டை செய்தான்.சிவனிடம் உன்னதமான பக்தியைப் பெற்றான்; ஶம்புவின் அருளால் பிநாகத்தை ஏந்தியுள்ள அந்த மகாதேவன் "ராமேஷ்வரர்" எனப் பெயர் பெற்றான். 

2.  பத்ம புராணம்  

               "தத்வாக்யம் ராகவஃ ஶ்ருத்வா பப்ரச்ச முநிபுங்கவான்
                ஶ்ரீராம உவாச - விⁿபீஷணஃ கதமஸௌ பத்தஃ ஶ்ருங்களயா ந்ருபிஃ ।
                மத்ⁿஸ்தாபிதம் ஶிவம் லிங்கம் த்ருஷ்ட்வா ராமேஶ்வரம் த்வஹோ
                த்ராவிடைஃ குடிலைர் துஷ்டைராத்மனா தத்விச்சார்யதாம் |" 
                                                                           -  5 (பாதாளகாண்டம்), அதிகாரம் 104, ஸ்லோகம் 33 - 36

    பொருள் : அந்த வார்த்தைகளை ராகவன் கேட்டவுடன், முனிவர்களின் தலைவர்களைக் கேட்டான். ஸ்ரீ ராமன் கூறினான்: “இந்த விபீஷணன் எவ்வாறு அரசர்களால் சங்கிலியில் கட்டப்பட்டான்?என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமான ராமேஸ்வரத்தைப் பார்த்து
த்ராவிடர்கள் (சில துஷ்டர்களால்),
தங்கள் குடில்மனத்தால் . ஆஹோ! தவறாகச் சிந்திக்கப்பட்டது;
அது பற்றி யதார்த்தமாக ஆராயப்படட்டும். 

               "ஸ்ரீபர்ணா ச நதி புண்யா வ்யாஸதீர்த்தமனுத்தமம் ।  
                 ததா மத்ஸ்யநதி காரா சிவதாரா ததைவ ச
                 பவதீர்த்தம் ச விக்யாதம் புண்யதீர்த்தம் ச சாஶ்வதம் ।
                 புண்யம் ராமேஸ்வரம் தத்வத்   வேணாபுரமலம்புரம்"
                                                                       -  1(ஸ்ருஷ்டி காண்டம்), அத்தியாயம் 11, ஸ்லோகம் 39, 40.

  பொருள் : புனிதமான ஸ்ரீபர்ணா என்ற நதியும், ஒப்பற்ற வ்யாஸ தீர்த்தமும் உள்ளது.மத்ஸ்ய நதியும், காரா எனப்படும் சரஸும், சிவதாரா என்ற தாரையும் உள்ளன.பவதிர்த்தம் என்ற புகழ்பெற்ற தீர்த்தமும், நித்திய புண்யத்தை அளிக்கும் புண்யதீர்த்தமும் உள்ளன.இவற்றைப் போலவே பாவநாசகமான ராமேஸ்வரம், மேலும் வேணாபுரம், அலம்புரமும் புண்யமானவை.


சிவமகாபுராணத்தில் கோடிருத்ர சம்ஹிதையில் உள்ள 31 ஆவது அத்தியாயம் 12 ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்றான இராமேசுவரத்தின் பெருமை பற்றி மட்டுமே கூறுவது. இராவணனை வெல்ல இராமனுக்கு சிவானுக்கிரகம் சித்தித்தை இந்த அத்தியாயத்தில் காணலாம். விரிவஞ்சி சில ஸ்லோகங்களை மட்டுமே இங்கு தந்தோம். 


 3. ஸ்ரீ சிவ மகா புராணம் , கோடிருத்ர ஸம்ஹிதை, அத்தியாயம் 31 , ராமேஶ்வர மாஹாத்ம்ய வர்ணனம்

              "இத்யுக்த்வா ச ஜலம் பீதம் ததா ரகுவரேண ச । 
                பஶ்சாச்ச பார்திவீம் பூஜாம் சகார ரகுநந்தனஃ
                ஆவாஹனாதிகாம்ஷ்சைவ ஹ்யுபசாராந்ப்ரகல்ப்ய வய் । 
                விதிவத் ஷோடஶ ப்ரீத்யா தேவமாநர்ச ஶங்கரம் 
                ப்ரணிபாதைஸ்தஸவைர்திவ்யைஶ் ஶிவம் ஸந்தோஷ்ய யத்நதஃ ।  
                ப்ரார்த்தயாமாஸ ஸத்பக்த்யா ஸ ராமஶ் ஶங்கரம் முதா  
                                                                     - 
ஸ்லோகம் 21- 24

     பொருள் :   இவ்வாறு கூறி, ரகுவரன் (ராமன்) நீரை அருந்தினான்.
அதற்குப் பிறகு, ரகுநந்தனன் புவியில் தேவபூஜையை செய்தான்.ஆவாஹனம் முதலான உபசாரங்களை முறையாக ஏற்படுத்தி, சோடஸ (16) உபசாரங்களுடன், மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும்
சங்கரனை பூஜித்தான்.தெய்வீகமான ப்ரணாமங்களால், ஆழ்ந்த முயற்சியுடன்
அவன் (ராமன்) சிவபெருமானை சந்தோஷப்படுத்தினான்.பின்னர், பரம பக்தியுடன், ஆனந்தமனத்தால்
ராமன் சங்கரனைப் பிரார்த்தித்தான்

              "ராம உவாச – த்வயா ஸ்தேயமிஹ ஸ்வாமிந் லோகானாம் பாவநாய ச ।
                பரேஷாம் உபகாரார்த்தம் யதி துஷ்டோʼஸி ஶங்கர"
                சூத உவாச –இத்யுக்தஸ்து ஶிவஸ்தத்ர லிங்கரூபோʼபவத்ததா ।
                ராமேஶ்வரஶ்ச நாம்நா வயி ப்ரஸித்தோ ஜகதீதலே
                ராமஸ்து தத்ப்ரபாவாத்வை ஸிந்துமுத்தீர்ய சாஞ்ஜஸா ।
                ராவணாதீன் நிஹத்யாஶு ராக்ஷஸாந் ப்ராப தாம் ப்ரியம் 
                ராமேஶ்வரஸ்ய மஹிமாத் ப்ஹுதோʼப்ஹூத் ப்ஹுவி சாத்துலஃ ।
                ப்க்திமுக்திப்ரதஶ்சைவ ஸர்வதா பக்தகாமதஃ
                                                                    -  ஸ்லோகம் 39 - 42

     பொருள் :   ராமன் கூறினான்: “ஸ்வாமியே! நீ எங்கள் உலகங்களைப் புனிதப்படுத்துவதற்காகவும்,
மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் இங்கு தங்கி இருக்கிறாய்.
இவையெல்லாம் உமக்குச் சந்தோஷமாக இருந்தால், ஓ சங்கரா!”
சூத முனிவர் கூறினார்: இவ்வாறு வேண்டிக் கேட்டபோது, அந்த இடத்தில் சிவபெருமான்
லிங்க ரூபமாகத் தோன்றினார். அந்தப் பேரினாலே அவர் “ராமேஸ்வரர்” என உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.அந்த சிவலிங்கத்தின் அருள்பலத்தால், ராமன் விரைவாகவே சமுத்திரத்தைக் கடந்தான். ராவணன் முதலான ராட்சஸர்களை வதம் செய்து தன் பிரியமான சீதையை மீண்டும் பெற்றான்.ராமேஸ்வரரின் மகிமையினால், பூமியில் அந்தத் தலம் மிகச் சிறப்பானது ஆனது. அது பக்தர்களுக்கு எப்போதும் பக்தி, முக்தி ஆகியவற்றை அளிப்பதோடு, எப்போதும் பக்தர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றும் புண்ணியத் தலம்.                                                                                 

                                                                                   திருச்சிற்றம்பலம்



Courtesy : Please check this video link to know the supremacy of Lord shiva 

Link : Lord shiva lectures - Rama jayanthi

No comments:

Post a Comment

சிவபரத்துவம் - சிவ சர்வோத்தமம்

    பரம காரணனாகிய சங்கரனே பரம்பொருள் என்றும் அவரே விஷ்ணு முதல் அனைத்து தேவர்களுக்கும் தலைவர் என்பதையும் வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இவைகளை ...