வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை - ஸ்கந்த மகா புராண சேது மகாத்மியம்.
ஸ்ரீ ஞானசம்பந்த குருப்யோ நமஹ
திருச்சிற்றம்பலம்
தச சைவ புராணங்களுள் மேன்மையாய் விளங்கும் ஸ்கந்த மகா புராணத்தில் உள்ள பிரம்ம காண்டத்தில் சேது மகாத்மியத்தில் பஸ்மத்தின் மகிமைகள் மற்றும் அவற்றை முனிவர்கள் அணிந்ததும் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில
அத்தியாயம் - 14 : பிரம்மசாபவிமோசனவர்ணனம்
அயனும் மாலும் சங்கரன் முடியையும் அடியையும் பல காலங்கள் தேடி ஒப்பிலாத அந்த சோதியின் ஆதி அந்தத்தை காணவியலாது அயர்ந்து பின் அயன் "நான் சங்கரன் முடியைக் கண்டேன்" என்று தாழம்பூவை சாட்சியாக வைத்து பொய் கூறவே சிவபிரான் சினந்து அவனுக்கு பூவுலகில் வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்று சபிக்கவும் பின் அச்சாபம் நீங்க சேதுவின் கந்தமாதன பர்வத்தில் வந்து யாகம் செய்து பாவம் நீங்கப்பெற்றனன் . பிரமன் யாகம் செய்த இடம் பிரமகுண்டம் என்றறியப்படும்.
ஸ்லோகங்கள் - 5,6,7
"ப்ரஹ்மகும்டே ஸக்ருத்ஸ்நாநம் வைகும்டப்ராப்திகாரணம | ப்ரஹ்மகும்டஸமுத்பூதம் பஸ்ம யேந த்ருதம் த்விஜாஃ ॥ 5 ॥
தஸ்யாநுகாஸ்த்ரயோ தேவா ப்ரஹ்மவிஷ்ணுமஹேஶ்வராஃ | ப்ரஹ்மகும்டஸமுத்பூதபஸ்மநா யஸ்த்ரிபும்ட்ரகம ॥ 6 ॥
கரோதி தஸ்ய கைவல்யம் கரஸ்தம் நாத்ர ஸஂஶயஃ | தத்பஸ்மபரமாணுர்வா யோ லலாடே த்ருதோ பவேத் ॥ 7 "
பொருள்:
பிரஹ்மகுண்டத்தில் ஒருமுறை ஸ்நானம் செய்தாலே வைகுண்டப் பிராப்திக்குக் காரணமாகும். அங்கே தோன்றிய பஸ்மத்தைத் தாங்கி அணிந்தவர் புண்யம் பெறுவர். அப் பஸ்மத்தால் யார் திரிபுண்ட்ரத்தை இடுகிறாரோ, அவரைத் தொடர்ந்து பிரஹ்மா-விஷ்ணு-மஹேஸ்வரர்கள் துணை நிற்பர்; அவருக்கு கைவல்யம் உறுதி. அந்த பஸ்மத்தின் அணுவளவும் நெற்றியில் தங்கினால்கூட, சந்தேகமின்றி கைவல்யம் கிடைக்கும்.
பிரஹ்மகுண்டத்தில் ஒருமுறை ஸ்நானம் செய்தாலே வைகுண்டப் பிராப்திக்குக் காரணமாகும். அங்கே தோன்றிய பஸ்மத்தைத் தாங்கி அணிந்தவர் புண்யம் பெறுவர். அப் பஸ்மத்தால் யார் திரிபுண்ட்ரத்தை இடுகிறாரோ, அவரைத் தொடர்ந்து பிரஹ்மா-விஷ்ணு-மஹேஸ்வரர்கள் துணை நிற்பர்; அவருக்கு கைவல்யம் உறுதி. அந்த பஸ்மத்தின் அணுவளவும் நெற்றியில் தங்கினால்கூட, சந்தேகமின்றி கைவல்யம் கிடைக்கும்.
அத்தியாயம் - 12 :
அத்தியாயம் - 12 :
சோமவம்ச அரசன் மனோஜவ (Manojava) முதலில் பல யாகங்கள் செய்தவன் என்றும் பின் அகங்காரத்தால் அரசாட்சி இழந்த வனத்திற்கு செல்லும் போது பசி, துன்பத்தால் மிக வாடி மனைவி சுமித்ரையிடம் “நான் முன்பு பக்தி/தர்மச் செயல்கள் செய்யாமல் இருந்தேன்” என்று பல ‘நான் செய்யவில்லை’ என்று புலம்புகிறான். அந்தப் புலம்பலில் பஸ்ம (விபூதி)–திரிபுண்ட்ரம்–ருத்ராக்ஷம் போன்றவை வருகிறது. பின்வரும் ஸ்லோகங்களை காண்க
ஸ்லோகம் 49
"ஹரிஶங்கரயோர்நாம்நாம் கீர்த்தனம் ந மயா க்ருதம் ।உத்தூலனம் த்ரிபுண்ட்ரம் ச ஜாபாலோக்தைஶ்ச ஸப்தபிஃ ॥ ௪௯ ॥"
பொருள்:
“ஹரி–சங்கரர் என்ற இருவரின் நாமங்களையும் நான் புகழ்ந்து (கீர்த்தனம்) சொன்னதில்லை.
ஜாபால உபநிடதம் கூறிய ஏழு முறைகளின்படி உடலில் விபூதி பூசி (உத்தூளனம்), திரிபுண்டரம் இட்டதும் இல்லை.”
(ஸ்லோகம் 50)
"ந த்ருதம் பஸ்மநா பத்ரே ருத்ராக்ஷம் ந த்ருதம் மயா ।ஜபஶ்ச ருத்ரஸூக்தாநாம் பஞ்சாக்ஷரஜபஸ்ததா ॥ ௫௦ ॥"
பொருள்
“அன்புள்ளவளே ! , நான் பஸ்மம் அணியவில்லை; ருத்ராக்ஷம் அணியவில்லை.
ருத்ரஸூக்த ஜபமும், பஞ்சாக்ஷர ஜபமும் செய்ததில்லை. ”
(ஸ்லோகம் 59)
பஸ்மோத்தூலிதஸர்வாங்கஸ் த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகஃ ।ருத்ராக்ஷமாலாபரணஃ ஸிதயஜ்ஞோபவீதவான் ॥ ௫௯ ॥
பொருள்:
“அந்த (பராசர) முனிவர் — உடலெல்லாம் பஸ்மம் பூசியவர்,
திரிபுண்ட்ரம் தலையில் திகழும்படி வைத்தவர்,ருத்ராக்ஷ மாலைகளை அணிந்தவர்,
வெண்மையான யஜ்ஞோபவீதம் அணிந்தவர்.”
குறிப்பு : பராசர முனிவர் விபூதி உருத்திராக்கம் அணிந்தவரென்பதை இதன் மூலம் அறியலாம். பஞ்சராத்திரிகள் அவரை ஊரத்துவபுண்டரம் தரித்தவர் போலக் காட்டுவது பரம அவைதிகமாகும். அத்தியாயம் 34 இல் சிருகாலன் (நரி) + வானரன் (குரங்கு) இருவரும் பழைய பிறவிகளை நினைவுகூர்ந்து தங்கள் பாவக்காரணங்களைப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது “சிந்துத்வீப” என்ற முனிவர் அங்கே வருகிறார். அவர் வருகை அடையாளமாக விபூதி பூசி, திரிபுண்ட்ரம் தரித்தவர் என்று சொல்கிறது
ஸ்லோகம் - 31
"ஆயயௌ ஸ மஹாதேஜாஃ ஸிந்துத்வீபாஹ்வயோ முநிஃ ।பஸ்மோத்தூலிதஸர்வாங்கஸ் த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகః ॥ 31 ॥"
பொருள் :
அவ்வாறு குரங்கும் நரியும் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு, “சிந்துத்வீபன்” எனும் மஹாதேஜஸ்வி முனிவர் வந்தார். அவர் உடல் முழுவதும் திருநீறு பூசியவராகவும், நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவராகவும் இருந்தார்.
அத்தியாயம் 51 இல் ஸேது யாத்திரைக்கு தேவையான சுத்தி–நியமத்தில் விபூதி + திரிபுண்ட்ரம் அனுஷ்டானமாக கட்டாயமாகச் சொல்லப்படுகிறது. அதனைக் காண்க.
ஸ்லோகங்கள் - 3,4
போஜயித்வா யதாஶக்தி ப்ராஹ்மணான் வேதபாரகான் ।பஸ்மோத்தூலித-ஸர்வாங்கஃ த்ரிபுண்ட்ராங்கித-மஸ்தகஃ ॥ 3 ॥கோபீசந்தனலிப்தோ வா ஸ்வபாலே’ப்யூர்த்வபுண்ட்ரகஃ ।ருத்ராக்ஷ மாலாபரணஃ ஸபவித்ரகரஃ ஶுசிஃ ॥ 4 ॥
பொருள்
தன் சக்திக்கேற்றபடி வேதத்தில் புலமை பெற்ற பிராமணர்களுக்கு அன்னம் அளித்தபின்,உடல் முழுவதும் விபூதி (பஸ்மம்) பூசி, நெற்றியில் திரிபுண்ட்ரம் அணிந்து இருக்க வேண்டும். மாற்றாக கோபீசந்தனம் பூசி, நெற்றியில் ஊர்த்வபுண்ட்ரம் அணிந்து, ருத்ராக்ஷ மாலை, பவித்ரம் முதலியவற்றுடன் சுத்தராக இருக்கலாம்.
குறிப்பு : இங்கே ஊர்த்துவ புண்டரம் குறிப்பிடப்பட்டது பஸ்மம் அணியும் தகுதி இல்லாதவர்களுக்கு என்றுணர்க. பாகாண்டிகளே இந்த புண்டரத்தை அணிவர் என்று சூத சங்கிதை பிரம்ம கீதை கூறுவதாலும் அறிக. அம்மட்டோ, இங்கே கோபிச்ந்தனைத்தை மட்டுமே கூறி துளசி மாலையை கூறாமல் விட்டது. இவ்வாற்றால் விபூதி அணிய இயலாத ஒருவனுக்கு விதிக்கப்பட்டதே இந்த கோபிசந்தன ஊர்த்துவ புண்டரமாகும் என்பது வெளியானது.
இத்யாதி ராம சேது மகாத்மிய புராண வசனங்களால் பஸ்மத்தின் பெருமையும் அதனை பராசரர், சிந்துத்வீபர் போன்ற முனிவர்கள் அணிந்ததும் பஸ்ம ஜாபால உபநிடதப் பெருமையும் நிலைநாட்டப்பட்டது.
"பராத்பரதரோ ப்ரஹ்மா தத்பராத்பரதோ ஹரிஃ ।தத்பராத்பரதோ ஈஶ தன்மே மனஃ சிவஸங்கல்பமஸ்து " - 18, ரிக், கில சூக்தம், சிவசங்கல்ப சூக்தம்
திருச்சிற்றம்பலம்
"ஆயயௌ ஸ மஹாதேஜாஃ ஸிந்துத்வீபாஹ்வயோ முநிஃ ।
பஸ்மோத்தூலிதஸர்வாங்கஸ் த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகః ॥ 31 ॥"
பொருள் :
அவ்வாறு குரங்கும் நரியும் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு, “சிந்துத்வீபன்” எனும் மஹாதேஜஸ்வி முனிவர் வந்தார். அவர் உடல் முழுவதும் திருநீறு பூசியவராகவும், நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவராகவும் இருந்தார்.
அத்தியாயம் 51 இல் ஸேது யாத்திரைக்கு தேவையான சுத்தி–நியமத்தில் விபூதி + திரிபுண்ட்ரம் அனுஷ்டானமாக கட்டாயமாகச் சொல்லப்படுகிறது. அதனைக் காண்க.
ஸ்லோகங்கள் - 3,4
ஸ்லோகங்கள் - 3,4
போஜயித்வா யதாஶக்தி ப்ராஹ்மணான் வேதபாரகான் ।
பஸ்மோத்தூலித-ஸர்வாங்கஃ த்ரிபுண்ட்ராங்கித-மஸ்தகஃ ॥ 3 ॥
கோபீசந்தனலிப்தோ வா ஸ்வபாலே’ப்யூர்த்வபுண்ட்ரகஃ ।
ருத்ராக்ஷ மாலாபரணஃ ஸபவித்ரகரஃ ஶுசிஃ ॥ 4 ॥
பொருள்
தன் சக்திக்கேற்றபடி வேதத்தில் புலமை பெற்ற பிராமணர்களுக்கு அன்னம் அளித்தபின்,
உடல் முழுவதும் விபூதி (பஸ்மம்) பூசி, நெற்றியில் திரிபுண்ட்ரம் அணிந்து இருக்க வேண்டும். மாற்றாக கோபீசந்தனம் பூசி, நெற்றியில் ஊர்த்வபுண்ட்ரம் அணிந்து, ருத்ராக்ஷ மாலை, பவித்ரம் முதலியவற்றுடன் சுத்தராக இருக்கலாம்.
குறிப்பு : இங்கே ஊர்த்துவ புண்டரம் குறிப்பிடப்பட்டது பஸ்மம் அணியும் தகுதி இல்லாதவர்களுக்கு என்றுணர்க. பாகாண்டிகளே இந்த புண்டரத்தை அணிவர் என்று சூத சங்கிதை பிரம்ம கீதை கூறுவதாலும் அறிக. அம்மட்டோ, இங்கே கோபிச்ந்தனைத்தை மட்டுமே கூறி துளசி மாலையை கூறாமல் விட்டது. இவ்வாற்றால் விபூதி அணிய இயலாத ஒருவனுக்கு விதிக்கப்பட்டதே இந்த கோபிசந்தன ஊர்த்துவ புண்டரமாகும் என்பது வெளியானது.
இத்யாதி ராம சேது மகாத்மிய புராண வசனங்களால் பஸ்மத்தின் பெருமையும் அதனை பராசரர், சிந்துத்வீபர் போன்ற முனிவர்கள் அணிந்ததும் பஸ்ம ஜாபால உபநிடதப் பெருமையும் நிலைநாட்டப்பட்டது.


No comments:
Post a Comment